Friday, June 15, 2012

சாம்பார் – ஒரு கலக்கல் ரெசீபி


சாம்பார் – ஒரு கலக்கல் ரெசீபி
(சாப்டு வயித்தக் கலக்கினா நான் பொறுப்பல்ல.)

எத்தினி நாள்தான் வெறும் சோறு, தயிருன்னு சாப்ட? சாம்பார் வைப்போம்னு
களத்துல குதிச்சோம். நேரா ரிலையன்ஸ் ஃபிரெஷ் போயி கெடைச்ச காய்கறி
எல்லாத்தையும் வாங்கி கூடைக்குள்ள போட்டோம். இந்த திடீர், பகீர்
முயற்சியின் பலனாக சாம்பார் செய்யக் கற்றுக்கொண்டோம். தங்களின்
  உபயோகத்திற்காக இங்கே பகிர்கிறேன்.

இது முற்றிலும் ஆண் பேச்சிலர்களுக்கு மட்டுமான பதிவு. பெண்கள் காபி
அடிக்க வேண்டாம்.

தேவையான (எனக்குத் தெரிந்த) பொருட்கள்:
1.      து.பருப்பு*             -       100கி
2.      பா.பருப்பு**            -       50கி
3.      உ.உ.பருப்பு***  -       கொஞ்சூண்டு
4.      கடுகு                   -       கொஞ்சூண்டு
5.      சீரகம்          -       கொஞ்சூண்டு
6.      வெந்தயம்                -       மிகக் கொஞ்சூண்டு
7.      புளி                    -       ஒரு நெல்லிக்கா சைஸ் தண்ணில ஊறப்                                         போடணும்.
8.      கறிவேப்பிலை     -       கொசுரு
9.      மல்லி இலை       -       கொசுரு
10.     காஞ்ச மிளகாய்   -       4
11.     சிறு உள்ளி      -       10
12.     பெரு உள்ளி      -       1
13.     கத்திரிக்கா, மாங்கா, உருளைக்கிழங்கு, முருங்கக்கா, தடியங்கா, சௌசௌ,முள்ளங்கி, வெண்டக்கா
(any one or any two or combinational as your wish – inki pinki ponki)
14.     மஞ்சப் பொடி     -       1 டீஸ் ஸ்பூன்
15.     மிளகாய்ப் பொடி  -       1 டீஸ் ஸ்பூன்
16.     சாம்பார் பொடி   -       தெர்ல மக்கா, கலர் வர்ற அளவு போட்டுக்கோ.


செய்முறை:

•       முதல்ல நாலு நாளா கழுவாம இருக்குற பாத்திரத்த எல்லாம் கழுவிக்கோங்க.
•       காய்கறி எல்லாம் நறுக்கி வச்சுக்கோங்க.
•       முதல்ல அடுப்ப பத்த வைங்க.
•       து.ப.வோ, பா.ப.வோ இல்ல ரெண்டும் சேர்ந்தோ காம்பினேசன்ல குத்து மதிப்பா எடுத்துக்கோங்க.
•       பருப்பக் கழுவனும். நோ சோம்பேறித்தனம். இல்ல பங்கஸ், ஆல்கா, புழு
எல்லாம் வயித்துக்குள்ள போவும். அப்புறம் நான்தான் சாம்பார் செய்ய சொல்லித்தந்தேன்.. என்னாலதான்  ஃபுட்-பாய்சன் ஆயிருச்சுன்னு கம்பிளைண்ட் பண்ணப்பிடாது.
•       காய்கறியையும், நறுக்கின வெங்காயத்தையும் கழுவி குக்கர்ல, பருப்போட போடுங்க.
•       தண்ணிய வேணுங்குற அளவு (அந்த வேணுங்குற அளவு எனக்கும் தெர்ல) தோராயமா ஊத்திக்கோங்க.
•       அடுப்பப் பத்த வச்சு, குக்கர் வாய மூடி அதுல வைங்க.
•       பிரஷர், டென்சிட்டி, வெலாசிட்டி மெஷர் பண்ணி குக்கர் வெயிட்டப்
போடணும். வெரி இம்பார்டண்ட்.
•       கொஞ்ச நேரங்கழிச்சு குக்கர் விசில் போடும். எண்ணணும் ஒன்னு, ரெண்டு, மூனுன்னு, . . .
•       கருகின வாட வர்றதுக்கு முன்னாடியே குக்கர எடுத்துறணும். அவ்ளோதான்.
•       எப்பக் கருகும்ன்னு சொல்ல மிடியாது. இதுக்குதான் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்.
•       அப்புறம் ஒரு கடாய்ய அடுப்புல வைக்கணும்.
•       ஜோ நல்லெண்ணெய் கொஞ்சம் (அவ்வ் லிஸ்ட்ல மறந்துட்டேன்) ஊத்தணும்.
•       இங்கதான் டைமிங் முக்கியம்.
•       கடுக எண்ணெய் காஞ்சதும் போடணும். எண்ணெய் எப்ப காயும்ன்னு கைய்ய விட்டுப் பாக்க வேணாம்.
•       கொஞ்சம் சீரகம், ரொம்ப கொஞ்சமா வெந்தயம் அதுல போடுங்க.
•       கடுகு வெடிக்கணும். ( அது எப்பிடின்னா கடுகு டொப்பு, டொப்புன்னு வெடிக்கும்.)
•       காஞ்ச மிளகாயையும், கருவேப்பிலையும் அதுல போடுங்க.
•       அப்புறம் அப்புறம் புளியக் கரைச்சு அதுல ஊத்துங்க.
•       இங்கதான் சேஃப்டி ப்ரிகாஷன் முக்கியம். தண்ணிக்கும், எண்ணெய்க்கும்
ஆவாது. பர்ணால் பக்கத்துல வச்சுக்குறது நல்லது.
•       கொஞ்சம் மஞ்சப் பொடி, அளவா மிளகாய்ப் பொடி போட்டு கலக்குங்க.
•       தென் சாம்பார் பொடி போடணும். (இஃப் இண்டெர்ரெஸ்டேட் இன் ரெட் கலர் ஆட் மோர். மறுநாள் பின்னாடி ரெட் லைட் எரிஞ்சா கம்பெனி பொறுப்பல்ல.)
•       அதுல வெந்த பருப்பு, காய்கறியப் போடுங்க.
•       எல்லாத்தையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்குங்க.
•       உப்பு ஒரு ரெண்டு,மூனு ஸ்பூன் போட்டுக்கோங்க.
•       சாம்பாரக் கொதிக்க விடணும். (முக்கியமா, நீங்க இப்ப வச்சத சாம்பார்ன்னு நம்பணும்.
நம்பினாத்தான் ரெசீபி சக்ஸஸ்).
•       மல்லி இலைய துண்டு துண்டா நறுக்கி சாம்பார் மேலத் தூவி மேக்கப் பண்ணனும்.
•       அட சட்டிய அடுப்புலருந்து இறக்கிருங்க. இதுக்கு மேல அத ஒன்னும் பண்ண முடியாது. விதி விட்ட வழி.

எச்சா தகவல்கள்:
•       *து.பருப்பு – துவரம் பருப்பு; **பா.பருப்பு – பாசிப் பருப்பு;
***உ.உ.பருப்பு – உடைத்த உளுத்தம் பருப்பு.
•       சாம்பார் தண்ணி ஆயிருச்சுன்னா கவல வேண்டாம். மேலாப்ல ஊத்தினா ரசம் எனக்
கொள்க. கலக்கி ஊத்தினா சாம்பார் எனக்கொள்க. சிம்பிள்.
•       எந்த காய்கறி அதிகமா போடுறீங்களோ அதுதான் அந்த சாம்பார் பேரு.
•       கத்திரிக்கா போட்டா கத்திரிக்கா சாம்பார். முருங்கக்கா போட்டா
முருங்கக்கா சாம்பார். சாம்பாருக்கு பேரு வைக்குறது ரொம்ப ஈஸி.


 பின் குறிப்பு:
•       இங்கு படித்தது, பார்த்தது எல்லாம் பல செயல்முறைக்களுக்கு
உட்படுத்தப்பட்டு பல வெற்றி, தோல்விகளைக் கடந்து பல ஆராய்ச்சிகளின்
முடிவில் இப்பதிவு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
•       தங்களின் இம்முயற்சிகள் தங்களின் சுயசிந்தனையிலும், துணிச்சலிலும்
எடுக்கப் பட்டவை.
•       தங்களின் சாம்பாரால் தங்களுக்கு எந்த உடல் உபாதை ஏற்படினும் தங்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் இது கவர் ஆகுமா என உறுதி செய்து கொள்க.
•       தாங்கள் சாம்பார் செய்ய எந்த விதத்திலும் கம்பேனியால் வற்புறுத்தப் படவில்லை.
•       “யாம் பெற்ற இன்பம்” என்ற நல்லெண்ணைய்லேயே ச்சே நல்லெண்ணத்திலேயே
இப்பதிவு வெளியிடப் பட்டது.
•       இது சாம்பார் வைக்கத் தெரியாத எந்த பெண் ட்விட்டர்களையும் கலாய்க்கும்
நோக்குடன் எழுதப் படவில்லை.
•       தங்களுக்கு எந்த வித “பின்”விளைவுகள் ஏற்பட்டாலும் கம்பேனி பொறுப்பல்ல.
•       தங்கள் செய்முறை தோல்வியடைந்தால் கம்பேனி வாசல்ல வந்து துப்பக் கூடாது.
•       சாம்பார் சரியில்லேன்னா ஆறு அடி குழி தோண்டி புதச்சிருங்க. நாயி, பூன
ஏதும் மோந்து பாத்து செத்துறாம.
•       தப்பித் தவறி சாம்பார் நல்லா வந்துருச்சுன்னா அதன் ராயல்டி கம்பேனியை
மட்டுமே சாரும்.

தங்களன்புள்ள,
ஜெகன் ஜீவா

5 comments:

  1. ஜூப்பரு மச்சி.. சீக்கிரமே கன்னாலமாயி ஊட்டுக்காரம்மாவுக்கு சாம்பார் வெச்சுத்தர வாழ்த்தூஸ் ;-)))

    ReplyDelete
    Replies
    1. உங்க திருவாயின் மகிமையோ மகிமை! கிர்ர்ர்! எண்ணி ஒரு வருசத்துக்குள்ள எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! நீரெல்லாம் நல்லா வருவீரும்! :)

      Delete
  2. Replies
    1. உங்களுக்கு சாப்டு கலக்காம இருந்தா சரி. டாங்க்ஸ் :)

      Delete