Friday, March 16, 2012

இனப்படுகொலை - துரோகமும்.. அழுகையும்..

'சேனல் 4'....

உலக தமிழர்கள் ஆதரவற்று நிற்கும் தருணத்தில் , ஆதரவு கரம்
நீட்டிய ஓரே மீடியா. போர் குற்றதின் உக்கிரத்தை உலகத்திற்கு வெளிச்சம்
போட்டு காட்டுகிறது...


இந்திய சேனல்கள், பத்திரிக்கைகளின் நிலை  ??...
சிலர் சோனியாவின் சர்வாதிகாரத்துக்கு பயந்து தங்கள் கைகளை கட்டிக் கொண்டு
நிற்கின்றனர்,..
பல பத்திரிக்கைகள் வேண்டும் என்றே தமிழினத்தை அழிக்க
துடிக்கின்றனர்....


சிலர் சொல்கிறார்கள் சேனல் 4  தன் விளம்பரத்துக்காக தானே இதெல்லாம்
செய்கிறது? என்று...
 அப்படியே இருக்கட்டும்..
ஆனால் எந்த சர்வதேச
மீடியாவிற்காவது இதனை ஒளிபரப்ப தைரியம் இருக்கிறதா? இல்லை...

இந்தியாவில்
ஹெட்லைன்ஸ் டூடே, புதிய தலைமுறை போன்ற சில சேனல்களே  அக்கறை
காட்டுகின்றன..




ஒரு கோடி தருகிறோம்.. எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.. இந்த பாட்டை யாருக்கு
டெடிகேட் பண்ணுறிங்க?... என்று கூவி கூவி விற்க்கும் தமிழ் சேனல்கள்,
இந்த பிரச்சனையில் ஏன் தொடர்ந்து மவுனம்???


இதில் 'தினமலர்' பத்திரிக்கை பற்றி சொல்லவே தேவையில்லை.. புலிகளை
எதிர்ப்பதாய் நினைத்து கொண்டு.. தமிழ் இனத்திற்க்கே துரோகம் செய்து
வருகிறது.. இந்த மாதிரி தினசரிகள் தமிழகத்தில் விற்பனையாவது நமக்கு தான்
கேவலம்.. சமூக வலைதளங்களில் மக்கள் இதனை 'தினமலம்' என்றே அழைக்கின்றனர்..


வட இந்திய ஆங்கில சேனல்கள் பல "தமிழக மீனவர்கள்" என அனைத்து
செய்திகளிலும் குறிப்பிடுகின்றன.. கேரளா மீனவர்களை "இந்திய மீனவர்கள்" என
குறிப்பிடுகின்றன.... ஏன் பிரிவினை? தமிழ்நாடு என்ன பக்கத்து நாடா?


சரி, இந்திய மீடியா தான் இப்படியென்றால்...

இந்திய அரசு?

பல இந்தியர்கள் வெட்கி தலைகுனியுமளவிற்கு ஈழ தமிழர்கள் பிரச்சனை கையாண்டு
வருகிறது..

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரித்தால் என்ன?

முடியாது..

ஏனென்றால், நீயும் கூட்டுக்களவானி தானே....

சீனா!
கொஞ்சம் கொஞ்சமாக நம் அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி
வருகிறது....சீனா இலங்கையுடன் இணைந்து தமிழகத்தை அழிக்கும் நாள் வெகு
தொலைவில் இல்லை...




தமிழக அரசியல் கட்சிகள், செய்த ஊழலுக்கெல்லாம் பயந்து, பதவிகளுக்காகவும்,
மத்திய அரசிடம் கை கட்டி, வாய் பொத்தி நிற்கின்றன..



மிச்சம் உள்ள ஈழ தமிழர்களை கூட  காப்பாத்த வக்கியில்லையா இந்த அரசுக்கு?
முள் வேலிகளில் அடைந்துள்ள நம் மக்கள் பசி, பட்டினி, சித்திரவதையால்
தினமும் பலர் இறக்கிறார்கள்... பெண்களின் நிலைமை பற்றி சொல்லவே
வேண்டாம்.. ராணுவத்தின் அறிவிக்கபடாத கேளிக்கை விடுதி தான் இந்த முள்
வேலி முகாம்..


இதெல்லாம் பார்த்துகொண்டு கையாளாகாத தழிர்களாய் நாம்..
சமூக வலைதளங்களில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.. பேரணிகளில் கலந்து
கொள்கிறோம்.. சிலர், ஈழ தமிழர்களுக்கு உதவிகளை செய்கிறோம்...

அவ்ளோதானா?

பிரச்சனை முடிந்துவிடுமா? 

எப்போது நமக்கு விடியும்?

அழுகையை தவிர வேறந்த பதிலும் நம்மிடம் இல்லை........


-- தல தளபதி

1 comment:

  1. India will not take action against Sri-lanka, Tamil People will not forgive Congress and Sonia...

    ReplyDelete